|
| 1 | சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட1,முதல் 15 வார்டுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் 01.04.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்திற்கு, 150 வீடுகளுக்கு ஒரு தள்ளுவண்டி என்ற அடிப்படையில் , வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து வாங்குதல், வளம் மீட்பு பூங்காவிற்கு எடுத்துச் சென்று சேர்த்தல், கால்வாய்கள்/மழைநீர் வடிகால்கள்/ வாறுகால்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல். |
| 2 | வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு வரப்படும் வீடுகளிலிருந்து பெறப்பட்ட மக்கும் திடக்கழிவுகள் மற்றும் வணிக பகுதிகளில் இருந்துகொண்டு வரப்படும் திடக்கழிவுகளை முறையாகப் பிரித்து, மக்கும் திடக்கழிவுகளைக் கொண்டு வளம் மீட்பு பூங்காவில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயார் செய்தல், மக்காத திடக்கழிவுகளை இனம் வாரியாக பிரித்து கட்டுச் சிப்பங்களாக கட்டி வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல். - 2 நபர் |
| 3 | பேரூராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு திடக்கழிவுகளை கையாளும் முறை பற்றியும், அவற்றை மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக பிரித்து வழங்குவது பற்றியும், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழித்து, பழக்க வழக்கத்தில் மாற்றத்தை (Behavioural change ) ஏற்படுத்தி,மலம் கழிக்க கண்டிப்பாக கழிவறைகளைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும், வாறுகால்கள்/ கால்வாய்கள் / மழைநீர் வடிகால்கள் மற்றும் ஊரணிகளில் கழிவுகளை கொட்டுதல் கூடாது, கழிவு நீரினை ஊரணியில் கலக்க விடுதல் கூடாது என்பது பற்றியும் , வீடுகள் தோறும் மக்கும் கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்தல் பற்றியும் இயற்கை உரத்தினை பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் அமைத்தல், (காய்கறிகள், கீரைகள்,கிழங்குகள் விளைவித்தல்) குறித்தும் இடவசதி இல்லாத வீடுகளில் மாடித்தோட்டம் உருவாக்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை நாள்தோறும் மேற்கொண்டு, களப்பணி செய்தமைக்கு பேரூராட்சி நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமான அறிக்கை செய்தல் பணிகளை மேற்கொள்ளுதல். |
| 4 | வளம் மீட்பு பூங்காவில் குவித்துவைக்கப்படும் கழிவுகள் எக்காரணம் கொண்டும் எரிவதையோ வெளிநபர் எவராலும் எரியட்டப்படுவதையோ தடுத்து சுற்றுச்சூழலுக்கும் முதியோர்களுக்கும், குழற்தைகளுக்கும் ஆஸ்துமா, நுரையீரல்புற்றுநோய், சுவாசப்பிரச்சனை போன்ற நோய்கள் உருவாகாமல் தடுக்கும் பணியினை மேற்கொள்ளுதல் (சுயஉதவிக்குழுவின் மேற்பார்வையாளர் தொடர் கண்காணிப்பு செய்தல் ). |
| 5 | திடக்கழிவு மேலாண்மை திட்டம், 2016-ன் கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டவங்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சேவைக்கட்டணங்களின் விபரங்கள் குறித்து பொதுமக்கள் / வணிகர்களிடையே விழிப்புணர்வு உருவாக்குதல். |
| 6 | நெகிழி தடை - தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள 14 (பதினான்கு) வகையான ஒருமுறை பயன்படுத்தி தெருக்கள் / வீதிகள் / சாலைகளில் தூக்கி வீசப்படும்/ எறியப்படும் நெகிழியால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், தடையை மீறி பயன்படுத்தி திடக்கழிவுகளாக தருகின்ற அல்லது வீதி/ சாலை/தெருக்களில் வீசுகின்ற பேரூராட்சி வாழ் பொதுமக்கள் / வெளியூர் பயணிகள் / சுற்றுலா பயணிகளுக்கு அபதாரம்/தண்டத்தொகை மாவட்ட அரசிதழில் குறிப்பிட்டுள்ளவாறு வசூல் செய்யப்படும் என சிறு/ குறு வியாபாரிகளுக்கும்,பெரிய வணிகர்களுக்கும் பேரூராட்சி வாழ் பொதுமக்களுக்கும் பேரூராட்சிக்குள் வந்து செல்லும் வெளியூர் பயணிகளுக்கும் விழிப்புணர்வு உருவாக்குதல். |
| 7 | பேரூராட்சிக்கு சொந்தமான வளம்மீட்பு பூங்காவின் மதிப்பு மிகு இடத்தில் சில ஆண்டுகளாக சேர்த்து வைக்கப்பட்டுள்ள பழைய திடக்கழிவுகளை தக்க வகையில் உரிய சல்லடைகளை கொண்டு சலித்து, கிடைக்கப்பெறுகின்ற இயற்கையாக மக்கிய மண்ணை பேரூராட்சியின் தாழ்வான இடங்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் ஆலோசனையின் பிரகாரம் கொட்டுதல் பணியினை மேற்கொள்ளுதல் (குறைந்த பட்சம் வாரந்தோறும் 3 (மூன்று) டன் மக்கிய மண்ணை சலித்து எடுக்க வேண்டும்). |
| 8 | A.பொது சுகாதார வாகனம் - மினி டிப்பர் - வாகன எண்.65 AW .1170 - 2 டன்- கனரக வாகனம் |
| 9 | B.பொது சுகாதார வாகனம் - உழூவை வாகனம் - வாகன எண். TN.65D.1027 - (ட்ரெய்லர் உடன்கூடிய டிராக்டர்) - 1 டன் - கனரக வாகனம் |
| 10 | C.பொது சுகாதார வாகனம் - இலகுரக வாகனம்- வாகன எண்.TATA.ACE-TN.65கு.9343 (டாடா ஏஷ் வாகனம்) |
| 11 | D.பேட்டரி வாகனம் - வார்டுகளில் திடக்கழிவுகளை அகற்றுதல் |
| 12 | E.கழிவுநீர் வாகனம் - வீடுகளில் கழிவுநீரை அகற்றுதல் -3நபர்கள் Please Enable Macros to View BoQ information |